

இன்று கனடா, ரொறன்ரோவில் தல அஜித் நடித்த பில்லா 2 திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் பிரமாண்டாக வெளியிடப்பட்டுள்ளது. பில்லா 2007 மற்றும் மங்காத்தா ஆகிய அஜித் படங்களின் வெற்றியினைத் தொடர்ந்து பிரமாண்டமாக வெளிவந்திருக்கின்றது பில்லா 2.
கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி, தல அஜித்தை வைத்து இயக்கிய படம் என்பதால் ஏகப்பட்ட எதிப்பார்ப்போடு ரசிகர்கள் பார்க்க வந்தார்கள். இந்த பலத்த எதிர்பார்ப்புக்களுடன் பில்லா 2 ஐ பார்ப்பதற்காக எமது haihoi டீமும் ரசிகர்களுடன் முதல் ஷோ பார்த்திட வேண்டும் என்ற ஆவலில் சென்றிருந்தது.
பொதுவாகவே தல அஜித்தின் படங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம் அதுவும் வெளியீட்டுத் திகதி அடிக்கடி மாற்றப்பட்டு எப்படா பார்க்கலாம் என்ற ஆவலில் வந்த ரசிகர்களை பில்லா 2 ஏமாற்றவில்லை. படத்தில் கதாநாயகிகள் இருவர் இருந்தாலும் படம் முழுவதும் அஜித்தின் விஸ்வரூபம் என்றால் அதில் மிகையில்லை. அஜித் படம் என்றால் யுவனின் இசை எப்போதுமே ஸ்பெஷல் தான். பாடல்கள் அனைத்துமே படத்திற்கு வலு. பாடல் பொருத்தப்பட்ட இடங்கள் பார்வையாளர்களை மேலும் படத்துடன் ஒன்றுபடச் செய்துள்ளது சிறப்பு.
பில்லா 2 இல் வரும் பஞ் டயலொக் எல்லாவற்றையும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்து மகிழ்ந்ததுடன் படம் முடிந்து போகும் போதும் தங்களுக்குள் சொல்லிக் கொண்டே போனது படத்தின் வெற்றி. சண்டைக் காட்சிகள் தொடக்கம் ஒவ்வொரு காட்சிகளுக்கும், பஞ் வசனங்களுக்கும் ஒரே விசில் சத்தம். குறிப்பாக இலங்கையில் தனது குடும்பத்தை இழந்து தமிழகத்திற்கு அகதியாய் வருகின்றார் டேவிட் பில்லா. அப்படி வந்து அகதி அந்தஸ்து பெற்றவர் எவ்வாறு பில்லாவாக மாறினார் என்ற கதையை சுவாரஸ்யம் குறையாமல் விருந்து படைத்திருக்கின்றார் இயக்குனர்.
பில்லா 2 கதை :-
படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் தம் அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்
உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா
என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது
!
சக்கரவர்த்தி டொலட்டிக்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்
சக்கரவர்த்தி டொலட்டிக்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்
படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக மதுரை பொண்ணு
பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி
சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க
!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு
மச்சீ என்று என் நண்பன் சொல்ல கேட்டேன்..!)
படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்
!
படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த
..தலதான் என்று
!
படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு
தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!
படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை
படத்தில் பெரிய திருப்பம் பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும் கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது
இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது சக்கரவர்த்தி டொலட்டிக்கு ஒரு பெரிய வெற்றி
!
பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து சக்கரவர்த்தி டொலட்டி கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்
!
இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் gang gang ganster
பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது
!
வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்
இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது
!
பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்
நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..
பில்லா 2 அஜித்க்கு இன்னொரு வைரக்கல்
சலங்கை ஒலி படத்தில் கமல்காசனை நடனமாடும் போது தலை, கை, கால் என்று பகுதி பகுதியாக போட்டோ எடுத்த பையனா இப்படி பில்லா 2 எடுத்திருக்கிறார் என்பது பலரின் வியப்பு.
மொத்ததில் பில்லா 2 தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு இன்னுமொரு வெற்றி அத்தியாயம்.

| Haihoi | Tamil | Telugu | Hindi | Myhaihoi | Cinema Chance | Funny Pics | Political News | Photos | Videos | News |
| Upcoming Films | Entertainment | Sports | Reviews | Box Office | Life Style | Health | Fashion | Wallpapers |
| RSS Feeds | Facebook | Twitter | Sitemap | Advertise with us | About Us | Carriers | Contact Us | Privacy Policy | Disclaimers |
|
Copyright © 2012. www.haihoi.com . All Rights Reserved. This Site has been conceptualised, designed and created by Haihoi.com Devlopers Duplication and usage of materials in this website without authorisation is illegal |